முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்திக்கு அனுமதியில்லை - தமிழக அரசு திட்டவட்டம்

திங்கட்கிழமை, 26 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதத்துக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக அனுமதிப்பதாக அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்திக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்கலாம்.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி அலகையும் திறக்க, இயக்க அனுமதியில்லை.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்துக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட்டை கண்காணிக்க தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து