எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசுரவேக கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் நேற்று இரவு (செவ்வாய்க் கிழமை) முதல் மே மாதம் 11-ம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை பரவல் நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் இந்த கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கையும், சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கையும் அறிவித்துள்ளன. கர்நாடகத்தில் வைரஸ் தொற்று பரவல் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூருவில் தான் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக அரசு கடந்த 10-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அறிவித்தது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னர் வஜூபாய் வாலா கடந்த 20-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். இதில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 21-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டது. அத்துடன் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 24, 25-ம் தேதி கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே முடிவு செய்தபடி கர்நாடக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் கொரோனா நிபுணர் குழுவினரும் பங்கேற்றனர். இதில் கர்நாடகத்தில் வேகமாக பரவும் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வேண்டுமென்றால் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மருத்துவ நிபுணர் குழுவும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. இதையடுத்து கர்நாடகத்தில் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்தில் (நேற்று)இரவு 9 மணி முதல் மே மாதம் 11-ம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகளை (முழு ஊரடங்கை) அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த கட்டுப்பாடுகள் 14 நாட்கள் அமலில் இருக்கும். இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி உண்டு. இந்த கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். அதன் பிறகு கடைகளை மூடிவிட வேண்டும். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் (கார்மெண்ட்ஸ்) தவிர உற்பத்தித்துறை, விவசாய உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமான பணிகள் செயல்படலாம். இந்த கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தாசில்தார்கள் தீவிரமாக அமல்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகிற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. தகுதியானவர்கள் தங்களின் பெயரை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த கொரோனா தடுப்பூசி இலவசமாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு சுகாதாரத்துறை தனியாக வழிகாட்டுதலை வெளியிட உள்ளது. கர்நாடகத்தில் இனி ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஏனென்றால் மத்திய அரசு தினசரி ஆக்சிஜன் வினியோகத்தை 300 டன்னில் இருந்து 800 டன்னாக உயர்த்தியுள்ளது.
பஸ் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. மெட்ரோ ரெயில்களும் ஓடாது. தனியார் வாகன போக்குவரத்துக்கும் அனுமதி இல்லை. அரசு அனுமதி வழங்கியுள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அடையாள அட்டைகளை காட்டி பணிக்கு செல்லலாம். டாக்டர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் பணிக்கு சென்று வர எந்த தடையும் இல்லை. அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 நாட்களுக்கு பிறகு நிலைமையை ஆராய்வோம். ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நகரங்களுக்கு கொண்டு வந்து காலை 10 மணிக்குள் விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.