முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் மே 3-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பானஜி : கோவாவில் இன்று இரவு முதல் மே 3-ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் கோவா மாநிலத்தில்  இன்று 29-ம் தேதி முதல்  மே 3-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். இன்று இரவு 7 மணி முதல் மே 3-ம் தேதி காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். ஓட்டல்கள், பார்கள், ஆகியவை திறக்க அனுமதி இல்லை. பொது போக்குவரத்து முடக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு  அனுமதி அளிக்கப்படும் என்று கோவா முதல்வர் அறிவித்துள்ளார். 

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,110- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கோவாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 81,908- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,086- ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து