முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானப்படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக டெல்லி, மராட்டியம் போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.  ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல விமானப் படையும் உதவி செய்து வருகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்தும் விமானப்படை மூலம் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியாவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். பிரதமர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் விமானப்படையின் பங்களிப்பை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர் - விமானப்படை தளபதி இடையே ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து