முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர்கள் அனைவரும் வளங்களை பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் : முதல்வர் எடப்பாடி மே தின வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று  மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் உன்னத தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன். 

உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் நன்னாளாகவும் மே தினம் கொண்டாடப்படுகிறது. 

தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும், எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று  மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து