முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலை தடுக்க ம.பி.யில் 200 கிராமங்களுக்கு சீல்

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

போபால் : கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசத்தில் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். அவர்களால் புதிதாக கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாகவும் வெளியாட்கள் வருவதைத் தடுக்கவும், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பண்டல்கண்ட், மால்வா மற்றும் மத்திய பிராந்தியத்திலுள்ள சுமார் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

வெளியூர்களில் பணியாற்றி விட்டு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, கிராமத்துக்கு வெளியே அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹோஷன்காபாத் மாவட்டத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, 130 கிராமங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து