முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரம்: ராஜ்நாத் சிங்

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட, ராணுவத்துக்கு அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இது குறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது, கொரோனா பரவலுக்கு எதிராக, ராணுவம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.  நாடு முழுவதும், தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது உட்பட பல்வேறு பணிகளில், ராணுவத்தினர் ஈடுபட்டுஉள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில், தங்கள் நடவடிக்கைகளை வேகப்படுத்த ராணுவத்துக்கு அவசர கால நிதி அதிகாரம் வழங்கப்படுகிறது. கமாண்டர்கள், ஏரியா கமாண்டர்கள், 50 லட்ச ரூபாய் வரையும், டிவிஷன் கமாண்டர்கள், ஏரியா துணை கமாண்டர்கள், 20 லட்சம் ரூபாய் வரையும், செலவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட கிரையொஜெனிக் கன்டெய்னர்களை, வெளிநாடுகளில் இருந்து எடுத்து வர, போர்க்கப்பல்களை கடற்படை ஈடுபடுத்தியுள்ளது.  முதல்கட்டமாக, மேற்காசிய நாடான பக்ரைன், தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து ஆகியவற்றில் இருந்து, ஆக்சிஜன் கண்டெய்னர்களை, கடற்படை கப்பல்கள் எடுத்து வர உள்ளதாக, கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து