முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இடங்களில் இரட்டை முகக் கவசங்களை அணியுங்கள்: கேரள முதல்வர் பினராய் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : பொது இடங்களில் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில், 

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும். சமூக ஆர்வலர்கள், மதபோதகர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விழிப்புணர்வில் பங்குகொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து