முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியீடு: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு  மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தேர்வை 21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.  இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதே நேரம், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத் தேர்வை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கொரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ம் தேதி சி.பி.எஸ்.இ. ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தேர்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3-வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து