முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை - மத்திய அரசு

திங்கட்கிழமை, 3 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு மக்களை கதி கலங்க வைத்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், சற்று ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. கடந்த 1-ம் தேதி 4.01 லட்சம், 2-ம் தேதி 3.92 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 732 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642- ஆகும். 

நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 71 லட்சத்து 98 ஆயிரத்து 207- தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தாலும், அது பொருளாதார பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலையிழப்புகளுக்கு காரணமாகி விடும் என மத்திய அரசு அஞ்சுகிறது.

தொற்று பரவல் 15 விகிதத்திற்கும் அதிகமாக உள்ள சுமார் 150 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை கொண்டுவரலாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. என்றாலும், கும்பமேளா போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் சூப்பர்ஸ்பெரட்டர்களாக மாறி இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் வைரஸ் தொற்றை பரப்பக்கூடும் என்ற அச்சமும் உருவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து