முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் இரு அணிகள் பாதிப்பு: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடைபெறுமா?

திங்கட்கிழமை, 3 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பால் இரு அணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐ.பி.எல் 2021 போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா். இவா்களுடன் சோ்த்து தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா்.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய 6 நகரங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது என பி.சி.சி.ஐ அறிவித்தது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐ.பி.எல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அகமதாபாத்தில் பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் ஆட்டம் நேற்றிரவு நடைபெற இருந்தது. எனினும் கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவத்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் அமைப்பு நேற்று அறிவித்தது. இரு கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு என்பதால் நேற்று நடைபெறுவதாக இருந்த பெங்களூர் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது. கொரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சென்னை அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னை வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. 

மேலும் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் - ஹைதராபாத்தில் ஆட்டத்தில் பணியாற்றிய ஐந்து மைதானப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலிருந்து சில வெளிநாட்டு வீரர்கள் விலகியுள்ளார்கள். தற்போது இரு அணி வீரர்களும் அதன் நிர்வாகிகளும் தில்லி மைதானப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஐ.பி.எல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி, அகமதாபாத் நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த இரு நகரங்களிலும் ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ யோசித்து வருவதாகத் தெரிகிறது. இதனால் அடுத்த சில நாள்களில் ஐ.பி.எல் போட்டி குறித்த முக்கிய முடிவுகளை பி.சி.சி.ஐ எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து