முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'கொரோனா' துயரத்தில் இருந்து இந்திய நாடு நிச்சம் மீண்டெழும் : கெவின் பீட்டர்சன் டுவிட்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி நோயின் துன்பத்தில் வாடுகிறதே என்றும், 'கொரோனா' துயரத்தில் இருந்து இந்திய நாடு நிச்சம் மீண்டெழும் என்றும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் 2021 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்தியாவின் நிலையை நிலைத்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கெவின் பீட்டர்சன் அதில் கூறியிருப்பதாவது., 

நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி துயரத்தில் வீழ்ந்திருப்பதைப் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது, நிச்சயம் இந்தியா இதனைக் கடந்து வந்து விடும். இதிலிருந்து மீளும் போது இன்னும் வலுவான தேசமாக மீண்டெழுவாய். இந்த நெருக்கடி காலத்திலும் உனது அன்பும், பெருந்தன்மையும் கவனிக்கப்படாமல் போய் விடாது. இன்கிரெடிபிள் இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து