முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி போடுவதில் முன்னிரிமை தராவிட்டால் வேலைநிறுத்தம்: விமானிகள் சங்கம் மத்திய அரசுக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021      இந்தியா
Image Unavailable

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னிரிமை வழங்கவில்லை என்றால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என ஏர் இந்தியா விமானிகள் சங்கத்தினர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா பேரிடரை சமாளிக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது. இதுகுறித்து ஏர் இந்தியா விமானிகள் மற்றும் இந்திய வணிக விமானிகள் சங்கத்தினர் விமானத்துறை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

18 வயதுக்கு மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்களில் உள்ள குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் முகாம்களை நடத்தவில்லை என்றால், நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து