முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து–இந்தியா நாடுகளிடையே ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தம்

புதன்கிழமை, 5 மே 2021      உலகம்
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது இரு தரப்பில் ரூ.10 ஆயிரத்து 200 கோடி வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளவிருந்த இந்திய சுற்றுப்பயணம் இருமுறை ரத்தானது.

கடைசியாக கடந்த மாதம் 25-ந்தேதி அவர் வரவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டபோது, அவரும், இந்திய பிரதமர் மோடியும் காணொலி காட்சி வழியாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகின.

அதன்படியே பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் நேற்று காணொலி காட்சி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சு வார்த்தையின்போது, இருதரப்பு ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது பற்றி இரு தலைவர்களும் பேசினார்கள்.

இங்கிலாந்து, இந்திய உறவில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் அடைவதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சனும், பிரதமர் மோடியும் உறுதி அளித்துள்ளனர். இரு தரப்பு உறவுக்கு 2030-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு கால திட்டம் இரு தலைவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இது இரு தரப்புக்கும் இடையே சுகாதாரம், பருவநிலை, வர்த்தகம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவுக்கான ஒரு புதிய கட்டமைப்பை வழங்கும். இந்தியாவுடன் ரூ.10,200 கோடியில் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது, பிரிட்டனில் புதிதாக 6,500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து