முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் ஐ.பி.எல் ஒத்திவைப்பு: இங்கிலாந்து அணி வீரர்கள் 8 பேர் தாயகம் திரும்பினர்

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : கொரோனா விவகாரத்தால் ஐ.பி.எல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய சொந்த நாட்டுக்கு ஜேசன் ராய் உள்ளிட்ட 8 இங்கிலாந்து வீரர்கள் திரும்ப சென்றுள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்ற 11 இங்கிலாந்து வீரர்களில் ஜேசன் ராய் உள்ளிட்ட 8 பேர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். 

மார்கன், ஜார்டன், மலான் ஆகிய மீதமுள்ள மூன்று வீரர்களும் அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து புறப்படுவார்கள். இங்கிலாந்து சென்றுள்ள வீரர்கள் 10 நாள்களுக்கு அரசு அங்கீகரித்த தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கொரோனா இல்லை என இரு பரிசோதனைகளில் உறுதியான பிறகு அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து