முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி சீரம் நிறுவன தலைமை அதிகாரி மனு

வியாழக்கிழமை, 6 மே 2021      இந்தியா
Image Unavailable

இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டை விரைந்து தருமாறு மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள் மிரட்டல் விடுகின்றனர்.  தனக்கும், குடும்பத்தினருக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு கேட்டு அவர் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  பூனவல்லா சார்பில் அவரது வழக்கறிஞர் தத்தா மானே மனுவை தாக்கல்செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து