முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்

வியாழக்கிழமை, 6 மே 2021      ஆன்மிகம்
Image Unavailable

கொரோனா பரவலால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

திருப்பதி, திருமலை, திருச்சானூர் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான சாமி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சுப்ர பாதம், காலை 6 மணியில் இருந்து காாலை 8.30 மணி வரை சகஸ்ரமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது. 

காலை 8.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கல்யாண உற்சவம், பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரேக் தரிசனம், மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.45 மணியளவில் கோவில் நடை சாத்தப்படுகிறது.  மாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இலவச தரிசனம், மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 7.15 மணிவரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. 

வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து காலை 5 மணி வரை சுப்ரபாதம், காலை 5 மணியில் இருந்து காலை 6.30 மணிவரை சஹஸ்ரநாமார்ச்சனை, நித்யார்ச்சனை, சுத்தி, முதல் மணி ஒலிக்கிறது. காலை 6.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை மூலவருக்கு அபிஷேகம், காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை அலங்காரம், காலை 9 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை இலவச தரிசனம், காலை 10 மணியில் இருந்து பகல் 11 மணி வரை மூலவருக்கு கல்யாண உற்சவம், காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பிரேக் தரிசனம். மதியம் 12 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை சுத்தி, 2-வது மணி ஒலிக்கிறது. மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இலவச தரிசனம், மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் உற்சவருக்கு அபிஷேகம், மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை அலங்காரம், மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சுத்தி, இரவு மணி ஒலிக்கிறது. இரவு 7.15 மணியளவில் ஏகாந்த சேவை, கோவில் நடைசாத்தப்படுகிறது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து