முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொற்று உறுதியான நிலையில் கொரோனா சிகிச்சைக்காக சென்னை வந்த நியூசி. வீரர்

சனிக்கிழமை, 8 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : தொற்று உறுதியான நிலையில் ஐ.பி.எல். கொல்கத்தா அணிக்கா விளையாடிய நியூசிலாந்து வீரர் கொரோனா சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார். 

தொற்று உறுதி

ஐ.பி.எல்-லில் விளையாடிய நியூசிலாந்து வீரர் டிம் சைஃபர்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  கேகேஆர் அணியில் இடம்பெற்றுள்ள டிம் சைஃபர்ட்டுக்கு அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட இரு பரிசோதனைகளிலும் கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை வருகை

இதையடுத்து சிகிச்சைக்காக அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வரவுள்ளார் டிம் சைஃபர்ட். சென்னையில் மைக் ஹஸ்ஸி சிகிச்சை எடுத்துக்கொண்ட தனியார் மருத்துவமனையில் சைஃபர்டுக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. 

நியூசிலாந்து பயணம்

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சென்னையிலிருந்து நியூசிலாந்து செல்லவுள்ளார் சைஃபர்ட். அங்கு அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகு தான் குடும்பத்தினருடன் இணைய முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து