முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி : திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்தனர்.  மேலும் பல நோயாளிகளின் உடல்நிலை மோசம் அடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து