முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகாலாந்தில் 14-ம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கோஹிமா : நாகாலாந்து மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 14-ம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும்  14-ம் தேதி மாலை 6 மணி முதல் 21-ம் தேதி வரை ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் நெய்பா க்ரோனு தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த  5-ம் தேதி இரவு 7 மணி முதல் ஏழு நாள்களுக்கு மாநில தலைநகர் கோஹிமா மற்றும் வணிக மையமான திமாபூரின் சில பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்தது.

இருப்பினும் தினசரி தொற்று மேலும் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து