முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் 25 மாணவர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனா தொற்று

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜோத்பூர் : ஜோத்பூர் ஐ.ஐ.டி.,யில் 25 மாணவர்கள் உள்பட 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஜோத்பூர் ஐ.ஐ.டி., துணை பதிவாளர் அமர்தீப் சர்மா கூறியதாவது:- ஏப்ரல் மாதத்தில் மாணவர்கள் செய்முறைத் தேர்விற்காக வந்தனர். அவர்களால் தொற்று பரவத் துவங்கியுள்ளது.

கடந்த  5-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 29 பேருக்குத் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வளாகத்தில் மொத்த பாதிப்பு 225 ஆக உயர்ந்துள்ளது.

பொதுவாக, மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்லத் துவங்குவர். ஆனால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், ஐ.ஐ.டி., நிர்வாகம் மாணவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் வளாகத்தில் தனிமைப்படுத்தும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து