முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ' ஜஸ்பிரித் பும்ரா - ஸ்மிருதி மந்தனா '

செவ்வாய்க்கிழமை, 11 மே 2021      விளையாட்டு
Image Unavailable

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி 

இந்திய கிரிக்கெட் அணியினர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியினர் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு வருகிறார்கள். தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ரஹானே, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டு விட்டனர். 

முதல் டோஸ்சை... 

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, அவரது மனைவியும் கூடைப்பந்து வீராங்கனையுமான பிரதிமா, பேட்ஸ்மேன் புஜாரா அவரது மனைவி பூஜா ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்சை எடுத்துகொண்டனர். தான் தடுப்பூசி போட்டுக்கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கும் விராட்கோலி தகுதியுடைய எல்லோரும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

பும்ரா - மந்தனா...

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். ஜஸ்பிரித் பும்ரா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனப்பதிவிட்டுள்ளார்.  இதேபோல், கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி  மந்தனாவும் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து