முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 11 கோடி திரட்டிய கோலி - அனுஷ்கா தம்பதி

வெள்ளிக்கிழமை, 14 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : கொரோனா நிவாரண நிதிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா இருவரும் இணைந்து ரூ.11 கோடி திரட்டியுள்ளனர்.

நிதி திரட்டினர்...

கொரோனாவின் 2-வது அலையில் தீவிரமாக சிக்கித் தவித்து வரும் இந்தியாவிற்கு தேவையான நிவாரண பணிகளுக்காக பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இருவரும் இணைந்து கிராவுட் ஃபண்டிங் தளம் மூலமாக 11,39,11,820 ரூபாயை திரட்டி உள்ளனர். இதனை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சமாளிப்போம்...

“எங்களது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் பலமடங்கு கூடுதலாக நிதி திரட்டப்பட்டுள்ளது. நிதி அளித்த, இந்த செய்தியை பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றி. நாம் எல்லோரும் இந்த இக்கட்டான சூழலில் ஒன்றாக இருந்து இதனை சமாளிப்போம்” என கோலி கேப்ஷன் கொடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து