Idhayam Matrimony

இந்தியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவது கடினம்: மைக் ஹஸ்ஸி எச்சரிக்கை

வியாழக்கிழமை, 20 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : இந்தியாவில் டி-20 உலகக்கோப்பையை நடத்துவது கடினம் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று

கொரோனா பரவலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹஸ்ஸி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்டு, தற்போது ஒருவழியாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் ஹஸ்ஸி. 

ஆபத்து அதிகம் 

இந்நிலையில் இந்தியாவில் உள்ள கொரோனா நிலைமைகளால் இந்தாண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்துவது கடினம் எனத் அவர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகமான அணி வீரர்கள் வருவார்கள் மேலும் அதிக இடங்களில் போட்டிகளை நடத்த வேண்டி இருக்கும் என்பதால் ஆபத்து அதிகம் என மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து