முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை விரைவில் கொள்முதல் செய்யுங்கள் : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 27 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அமெரிக்காவின் பைஸர் தடுப்பூசியை விரைவாக மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து மத்திய அரசுடன் பைஸர் நிறுவனம் தீவிரமாக பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் ஜூலை முதல் அக்டோபர் மாதத்துக்குள் வழங்க தயாராக இருப்பதாக பைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், 

பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும். நமது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை விரைந்து செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  3-வது அலை வருவதற்கு முன் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும், அதற்குள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து