முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் மீன்பிடி தடை காலம் ஜூன் 10-ம் தேதி தொடங்குகிறது: விசைபடகுகள் 52 நாட்கள் கடலுக்கு செல்ல தடை

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஜூன் மாதம் 10-ம்  தேதி தொடங்குகிறது. இதனை மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியான் தெரிவித்தார்.

கேரளாவின் முக்கிய தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று.  கடலில் மீன் வளத்தை பெருக்க ஆண்டு தோறும் விசை படகுகள் கடலில் மீன்பிடிக்க 60 நாட்களுக்கு தடை விதிக்கப்படும்.  அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஜூன் மாதம் 10-ம்  தேதி தொடங்குகிறது. இதனை மாநில மீன்வளத்துறை அமைச்சர் சஜி செரியான் தெரிவித்தார்.

இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் அமைச்சர் சஜி செரியான் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான மீன் பிடித்தடை காலம் வருகிற ஜுன் 10-ம்  தேதி முதல் ஜுலை மாதம் 31-ம் தேதி வரைஅமலில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கேரளாவில் மொத்தம் 52 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைகாலத்தில் மீனவர்கள் விசைபடகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட மாட்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து