முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் ஜூன் 15 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கவுகாத்தி : அரியானாவில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியானாவில் நிலவி வரும் கொரோனா பரவல் சூழல் காரணமாக ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படாது எனும் தகவல் வெளியாகியுள்ளது. 

மாணவர்களுக்கான கோடை விடுமுறை ஜூன் 15-ம் தேதி நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 1 முதல் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 26,874 பேர் கொரோனா தொற்று பரவலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து