முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை நீடிப்பு: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

வெள்ளிக்கிழமை, 28 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இதற்கான அறிகுறிகள் அந்தமான் மற்றும் குமரி கடல் பகுதியில் தென்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

அரபி கடலில் உருவான தக்தே புயல் மற்றும் வங்க கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கேரளாவில் கனமழை கொட்டியது. யாஸ் புயல் கரையை கடந்த பின்னரும் கேரளாவில் மழை நீடிக்கிறது.

இது பற்றி கொச்சி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இங்கு மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து