முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகாரில் சிக்கிய தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சென்னை : பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தடகளப் பயிற்சியாளர் நாகராஜனை வரும் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் தொல்லை 

கடந்த 2013-ம் ஆண்டு பயிற்சிக்கு சென்றபோது தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் வீராங்கனை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நாகராஜன் மீது பூக்கடை மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர். போக்சோ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோது, முறையான ஆவணங்கள் இல்லாததால் சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

11-ம் தேதி வரை...

முறையான ஆவணங்கள் இன்றி இரவு நேரத்தில் நீதிபதியை தொந்தரவு செய்ததாக காவல் ஆணையர் ஜெயலட்சுமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிபதி பரிந்துரைத்தார். இந்நிலையில், நேற்று காலை முறையான ஆவணங்களுடன் நாகராஜனை ஆஜர்படுத்தியபோது, அவரை வரும் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து