முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா : புதிதாக 1.52 லட்சம் பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்குள் கீழ் குறைந்துள்ளது. உயிர்ப்பலியும் குறைந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை இறங்குமுகம் காணத்தொடங்கி இருக்கிறது. மே 25-ந் தேதிக்கு பின்னர் கடந்த 30-ம்தேதி தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தது. 

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 47 ஆயிரத்து 534 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து100 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரத்து 022 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 92 ஆயிரத்து 342 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 20 லட்சத்து 26 ஆயிரத்து 092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து