முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு : மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றுக்கு முன் களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். 

இந்நிலையில், புதுச்சேரி கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்த 45 வயதான சசி பிரபா என்ற பெண், ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். புதுச்சேரியில் இதுவரை 10க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து