முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண உதவி: அமைச்சர்

திங்கட்கிழமை, 31 மே 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு டுவிட்டர் மூலம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘கொரோனா நோய் தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள்- பட்டாச்சாரியார்கள்- பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித்தொகை ரூ.4000, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும். 

இதன் மூலம் சுமார் 14,000 திருக்கோயில் ஊழியர்கள்- உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன்-3 துவக்கப்படும் என்பதை தெரிவித்து மகிழ்ச்சியடைகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து