முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எப்., கணக்கில் முன்பணம் எடுக்கலாம்: மத்திய அரசு

திங்கட்கிழமை, 31 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடில்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதாரர்கள், தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் தொற்றின் 2வது அலை காரணமாக பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழந்தும் ஊதியக் குறைவால் அவதிப்பட்டும் வருகின்றனர்.

இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்புத்தொகையில் குறைவான முன்பணத்தை எடுத்துக் கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து