முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை அதிகமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி கடிதம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். 

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில், 

'தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் (mucormycosis) வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

இதற்கான ஆம்போடெரிசின்-பி (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து