முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்போரை மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது.  அறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம். 

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும்.  தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும்.  கொரோனா நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சையை தொடர மருத்துவத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து