முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் 518 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 518 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கருப்பு பூஞ்சை எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கரும்பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர்.

கரும்பூஞ்சை பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரும்பூஞ்சை பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து