முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வு ரத்து: பிரதமருக்கு எடப்பாடி நன்றி

புதன்கிழமை, 2 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

‌‌‌‌நடப்பாண்டிற்கான சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரும் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதில் தற்போதைய கொரோனா சூழலில் தேர்வுகளை நடத்துவதன் நன்மை, தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும், அதை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ள முடியாது என்றும் பிரதமர் கூறினார். எனவே இந்தாண்டுக்கான சி.பி.எஸ்.இ பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் கைவிடப்படுகிறது. 

தேர்வுகுறித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது. நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் தேர்வெழுத மாணவர்களை நிர்பந்திப்பது சரியாக இருக்காது என்றும். இந்த சூழலில்தான் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்து அதன் அடிப்படையில் தேர்வை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 

சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வை மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போதும் தேர்வுகள் நடத்த ஏற்ற சூழல் இல்லாததால் அவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை, குறித்த காலத்திற்குள் சி.பி.எஸ்.இ பிளஸ் -2 முடிவு செய்யும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- 

சி.பி.எஸ்.இ பிளஸ் -2 தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம் பிளஸ் 2 மாணவர்களின் அச்சங்களுக்கு நியாயமான தீர்வு காணப்பட்டு உள்ளது மாணவர்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு தேர்வு ரத்து முடிவை எடுத்தது வரவேற்கத்தக்கது” என்று கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து