முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமி பாலியல் பலாத்காரம்: பிரபல டி.வி. நடிகர் கைது

சனிக்கிழமை, 5 ஜூன் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொலைக்காட்சி நடிகரான நாகின்- 3 புகழ் பேர்ல்  வி பூரி கைது செய்யப்பட்டுள்ளார். 

பேர்ல் வி பூரி கடந்த 2013-ம் ஆண்டில் தில் கி நாசர் சே கூப்சுரத் மூலம்  அறிமுகமானார், பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.  சிறுமி ஒருவரை  மேலும் ஐந்து நபர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் கூறியதாவது:-

இந்த சம்பவம் பழையது, ஆனால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாயுடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார்.  நாங்கள் பிரிவு 376 (கற்பழிப்பு)  மற்றும் போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம்.பூரி  நீதிமன்றத்தால் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாட்டீல் மேலும் தெரிவித்தார். டி.வி. தொடர்களில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமியை  நடிகர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதற்கிடையில், இந்த செய்தி வெளியானவுடன், நாகின் - 3  பூரியுடன் நடிக்கும்  நடிகை அனிதா ஹசானந்தனி அவருக்கு ஆதரவாக பேசினார். இன்ஸ்டாகிராமில் அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த அவர்,  சில முட்டாள்தனமான செய்திகளுக்கு பதில் அளிக்கிறேன்.  பேர்ல்  வி பூரியை எனக்கு நன்றாக தெரியும்.  இது உண்மையல்ல.  உண்மையாக இருக்க முடியாது. எல்லாம் பொய்கள்.  விரைவில் உண்மை வெளிவரும். ஐ லவ் யூ  பேர்ல்  வி பூரி என கூறி உள்ளார்.  நடிகை அனிதா ஹசானந்தனி தமிழில் வருசெமெல்லாம் வசந்தாம், சாமுராய், சுக்ரன்,நாயகன்,மகராஜா ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து