முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி இல்லை

சனிக்கிழமை, 5 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தமிழகத்தில்  தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.

பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல் தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து