எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தில், மாநில திட்டக் குழு, கலைஞரால் 1971-ம் ஆண்டு மே திங்கள் 25-ம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதல்வரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து, (ஓய்வு), மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் T.R.B. இராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஏறத்தாழ 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களுக்காகவும், சர்வதேச ஆய்வு நிறுவனங்களுக்காகவும் ஆய்வுகள் மேற்கொண்டவர்.
பேராசிரியர் இராம. சீனுவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பல்கலைகழக ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 2006-2011 ஆகிய ஐந்து ஆண்டுகள் தமிழக அரசின் திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்தார், அதில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுநேர உறுப்பினராக இருந்தார். 2017-2020 ஆகிய மூன்று ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றினார். தற்போது சென்னை பல்கலைக் கழத்தின் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும், பல்கலைக் கழக ஆராய்ச்சி பிரிவு டீன், மற்றும் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார்.
பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Stuidies) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதியம், ஐக்கிய நாடுகளின் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் (The United Nations Research Institute for Social Development -UNRISD) ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ள அவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளியலுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.
தீனபந்து (ஓய்வு), 1982-ம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். பொருளாதாரத்தில் M.A. மற்றும் M.Phil., பட்டங்கள் பெற்ற இவர், இந்திய ஆட்சிப் பணியில் பணியில் சேருவதற்கு முன்பாக, State Bank of India வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றியவர். தமிழ் நாடு அரசில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வாரியம், கல்வித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இவரது பணிக் காலத்தில், இலங்கை அகதிகளுக்கு வீட்டு வசதித் திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகைத் திட்டம், சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம், இராமநாதபுரம் மற்றும் ஓக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம், அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பணிகள் நடைபெற்றன.
பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில், சென்னையில் உள்ள லாப நோக்கமற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர், ஆலோசகர் அவர் 25 நவம்பர் 1974 முதல் புது கல்லூரியில் (The New College) விலங்கியல் பேராசிரியராக இருந்தார், பின்னர் அவர் விலங்கியல் துறையின் தலைவராகவும் பின்னர் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். இவர் இந்திய மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர். ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது. 1994-95 ஆம் ஆண்டிற்கான CASTME விருது அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. 2005 தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுசூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக அறிஞர் அண்ணா விருது. ஜூன் 2018-ல் சீனாவின் 1-வது உலக மண்புழு தொழில் மன்றத்தின் சிறப்பு பங்களிப்பு விருது 2019 the Champion of Chennai விருதும் பெற்றுள்ளார்.
சித்த மருத்துவர் சிவராமன், சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும்பங்கு வகித்தவர்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை, அதன் சூழலுக்கு இசைவான உழவு குறித்த பயனை, உலகெங்கும் பல தளங்களில் உரையாடி, வெகுசன ஊடகங்களில் கட்டுரைகளாகவும், காட்சி ஊடகங்களில் தெளிவுற உரைத்தும் இன்றும் சிறுதானியப் பயன்பாட்டை பெரிதும் உயர்த்தியதில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.
வாங்க வாழலாம் என்ற இவர் எழுதிய நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற நூல். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக சிறந்த மருத்துவர் விருது, அமெரிக்காவின் பெட்னா அமைப்பின் விருது,. 2021 ஆண்டில் கனடா நாட்டு தமிழ்ச்சங்கத்தின் தமிழ் மரபுக்காலவலர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.
பத்மஶ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ், தனது நளினமான நடனத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர். குறிப்பாக இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஶ்ரீ விருதைப் பெற்ற முதல் திருநங்கை நடனக் கலைஞர் இவர். மிகப்பழமையான தஞ்சாவூர் நடனமுறைகளை முதன்மையாகக் கொண்டு இவர் வழங்கி வரும் நடனம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
மல்லிகா ஶ்ரீனிவாசன், டிராக்டர் அண்டு பார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (TAFE Limited) என்ற வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் அங்கம் வகிக்கும் நிறுவனம், இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டிராக்டர்களை, ஏறத்தாழ 100 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளதார அளவியல் (Econometrics) பட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர். 2014-ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஶ்ரீ’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், 1986-ம் ஆண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக அரசுப் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை மருத்துவ கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராகப் பணி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2008-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உருவாக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றியவர் ஆவார். இத்திட்டம் இந்தியாவின் முன்னோடி என பல இந்திய, சர்வதேச பத்திரிகைகள் பாராட்டின. உலக புகழ் பெற்ற க்ஷசவைiளா ஆநனiஉயட துடிரசயேட இத்திட்டத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியது முக்கியமான ஒன்றாகும்.
T.R.B ராஜா கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மைப் படிப்பில் ((Counselling Psychology & Management) முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும், மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க