முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்மாத இறுதிக்குள் 36.5 லட்சம் டோஸ் தடுப்பூசிக்கு எதிர்பார்ப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஊட்டி : ஜூன் மாதம் இறுதிக்குள் 36.5 லட்சம் டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

ஊட்டியில், நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில், கோவிட் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடந்தது.  முன்னதாக, நேற்று  காலை, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளாண்ட்டை பார்வையிட்டார். பின், ஊட்டி கோல்ப் கிளப்பகுதியில், 447 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்பகுதிகளை பார்வையிட்டார்.

பின் அமைச்சர் மா. சுப்ரமணியன், நிருபர்களிடம் கூறுகையில், 

கோவிட் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஜூலை மாதம் இறுதிக்குள் முடிவடைகிறது. கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் துவங்கும் என்று தெரிவித்தார். 

இதன் பின்னர், மசினகுடியில் கோவிட் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பின்னர், அமைச்சர் கூறுகையில், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும். ஜூன் மாதம் இறுதிக்குள் 36.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து