முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 847 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் இதுவரை 847 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது

கொரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று பாதிப்பும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கரும்பூஞ்சை பாதிப்பு குறித்து ஆராய ஒரு சிறப்பு நிபுணர் குழுவையும் தமிழக அரசு நியமித்து அந்த குழுவும் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கரும்பூஞ்சை நோய்க்கான மருந்து தேவை அதிகரித்துள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  மேலும், தமிழகத்தில் இதுவரை 847 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சை நோய்க்காக மத்திய அரசிடம் இருந்து இதுவரை 2,470 ஆம்போடெரிசின் பி மருந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து