முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 பேர் பாலியல் புகார்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

தடகள பயிற்சியாளர் நாகராஜன் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாக விளையாட்டு  வீராங்கனை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 29-ம் தேதி நாகராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது சிறையில் அடைக்கப்பட்ட நாகராஜனை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கும் விளையாட்டு பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து