முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாய நகை கடன்களுக்கு 3 சதவீத மானியம்: நபார்டு வங்கி

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விவசாய நகை கடன்களை முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு 3 சதவீதம் மானியம்   வழங்கப்படும் என்று நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா 2-வது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இதனால், நகை கடன்களை முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து