முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களாக அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

313 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 881 கன அடியாக அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.77 அடியாகவும், நீர் இருப்பு 60.73 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து