முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறப்புச் சான்றிதழில் கொரோனா உயிரிழப்பு என குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் இறப்புச் சான்றிதழில் கொரோனா உயிரிழப்பு என குறிப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால் இறப்புச் சான்றிதழில் கொரோனா உயிரிழப்பு என சான்றளிக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோவிட் தொற்றின் காரணமாக நேற்று முன்தினம் (ஜூன் 7) வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றால் இறக்க நேரிட்டவர்களுக்கு, அவர்களது இறப்புச் சான்றிதழில் கோவிட் நோய் தொற்றால் இறந்தார்கள் எனக் குறிப்பிடுவதில்லை. மாறாக, வேறு காரணங்களால் இறந்தார்கள் என இறப்புச் சான்றிதழ் தருவதாக மாநிலம் முழுவதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், கோவிட் தொற்றால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என புகார் கூறியுள்ளனர்.

மேலும், இவ்வாறு சான்றிதழ் தருவதால், ஒருசிலர் இறந்தவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று உற்றார் உறவினர் கலந்து கொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர். நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டால் கோவிட்டால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கு விசாரணையின் போது, அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அதிகாரிகள் வாயிலாக குழந்தைகளை கணக்கெடுத்து, 24 மணி நேரத்திற்குள் சிறார் நலக் குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, தமிழக அரசு, கோவிட் நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது இறப்புச் சான்றிதழில் கோவிட் நோய் தொற்றினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்றளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், கோவிட்டால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்றடைவதையும், கோவிட் வழிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து