முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

புதன்கிழமை, 9 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது. தமிழகத்திலும் இன்னும் சில நாட்களில் 100 ரூபாயை தொட்டுவிடும். 

இதற்கிடையே கோவிட் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமப்படும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை மேலும் சிரமத்திற்கு தள்ளிவிடுகிறது. மேலும், எரிப்பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை (ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு முன்பு நாளை வெள்ளிக்கிழமை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து