முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் கொரோனா பாதிப்பில் டெல்டா வகை வைரஸ் அதிகம்

வியாழக்கிழமை, 10 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூர் மக்கள் டெல்டா வகை உருமாறிய வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானோர் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய டெல்டா வகை உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸில் டெல்டா வகை மோசமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை பாதிப்புகள் உச்சத்தை அடைய இந்த வகை உருமாறிய வைரஸே முக்கிய காரணமாக அமைந்ததுள்ளது.

இதையடுத்து மே 31-ம் தேதி நிலவரப்படி சிங்கப்பூர் உள்ளூரில் 449 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 428 பேர், இந்தியாவில் முதன்முதலில் உருமாறியதாக கண்டறியப்பட்ட டெல்டா மற்றும் 9 பேருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் உருமாறிய பீட்டா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் மே மாத தொடக்கத்திலேயே உருமாறிய டெல்டா வைரஸ் உள்நாட்டில் இருப்பதை சிங்கப்பூர் அதிகாரிகள் முதலில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து உருமாறிய டெல்டா வைரசால் தொற்று அதிகரித்ததையடுத்து சிங்கப்பூரில் கடந்த மாதம் சமூக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து