முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

மகராஷ்டிராவில் தொடர் மழையால், ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியது. இதனால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில மும்பை புறநகர் ரயில்கள் மழையால் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் தற்போதைய நிலை, ரயில்கள் சுமுகமாக இயங்குவதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக மும்பையில் உள்ள ரயில்வே பருவ மழையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். பருவ மழையின்போது மும்பைவாசிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்வதில் ரயில்வேயின் தொழில்நுட்ப மற்றும் சிவில் பணிகளின் செயல்திறனை ஆய்வு செய்வதற்காக ஐ.ஐ.டி. மும்பை போன்ற நிறுவனங்களுடன் ரயில்வே துறை கைகோர்க்க வேண்டும். ரயில்களின் பாதுகாப்பு மற்றும் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக புதுமைகளும், கடின உழைப்பும் இணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து