முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது: முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஜோலார்பேட்டை : பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லாமல் இருக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திருப் பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்த பேரறி வாளன் கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் பரோலில் 4-வது முறையாக தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், பேரறிவாள னுக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும், அதனால் இனிமேல் சிறைக்கு அவர் செல்லக்கூடாது. அதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டுவிட்டர் மூலம் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, 

கடந்த 30 ஆண்டு சிறை வாழ்க்கை அனுபவிக்கும் பேரறிவாளன் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்கு சிறு, சிறு மருத்துவம் கிடைத்தாலும், தொடர் மருத்துவம் கிடைப்பது இல்லை. இதனால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை குறைக்க அவர்களுக்கு பரோல் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று இருப்பதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பேரறிவாளனுக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காக பரோல் வழங்க தமிழக அரசுக்கு விண்ணப்பித்தேன்.

இதனையேற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. ஆனால், பேரறிவாளனுக்கு உடல்நிலையை கண்காணிக்க வேண்டிய சூழல் உள்ளதால். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அவருக்கு தேவைப்படுகிறது.

எனவே நீண்ட சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இனி சிறைக்கு செல்லக்கூடாது. அதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து